சாதியை பற்றியே பொய்...  ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். இவரது யாத்திரை தற்போது ஒடிசா, ஜார்சுகுடாவில் நடைபெற்று வருகிறது. 

இந்த யாத்திரையில் ராகுல் காந்தி பேசிய போது, பிரதமர் மோடி தனது ஜாதி பற்றி பொய் சொல்கிறார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல இவர். 

பிரதமர் குஜராத்தில் தெலி ஜாதியில் பிறந்தவர். கடந்த 2000 ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா ஜனதா வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி பொது பிரிவில் பிறந்தவர். 

பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தான் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் யாத்திரையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து விமர்சிப்பதையும் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை பேசுவதும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi caste Rahul Gandhi sensational accusation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->