போச்சே... போச்சே... இளைஞரின் அந்த இடத்தை கவ்விய பிட்புல் நாய்! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் பிட்புல் நாய் ஒன்று 30 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பை கடித சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 ஹரியானா மாநிலத்தின்  கர்னால் கிராமத்தில்  பிட்புல் நாய் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சுத்தி வந்திருக்கிறது. இந்த நாய் அவ்வப்போவது மனிதர்களின் மீதும் வெறி கொண்டு தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஏற்கனவே ஒரு நபர் காயமடைந்துள்ள நிலையில் 30 வயதுள்ள இளைஞரின் அந்தரங்க உறுப்பை கடுமையாக கடித்து இருக்கிறது இந்த நாய். இதனால் அந்த நபர்  மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சிறு குழந்தைகள் எதையும் அந்த நாய் தாக்கி கொன்று விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைந்த பகுதி மக்கள் இரண்டு நாட்களாக சுற்றி திரிந்த பிட்புல் நாயை அடித்து கொன்றனர்.

அந்த நாயின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சம் அதிகமாக இருந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு பேரை தாக்கி காயப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடம் வேறுபட்ட அச்சம் காரணமாக தற்காப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அந்த நாயை அடித்துக் கொன்றதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த நாயை யாரும் வளர்த்தார்களா அது எங்கிருந்து வந்தது என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pitbull dog grabs youth private organ


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->