காதல் திருமணம் செய்த இளம் தம்பதி கொடூர கொலை: விசாரணையில் தந்தை அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


மும்பை, மான்கூர டு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 14ஆம் தேதி வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பார்த்த போது வாலிபரின் கழுத்து அறுத்த  நிலையில் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இருப்பினும் அவர் யார் என அடையாளம் தெரியாததால் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

கடந்த 16ஆம் தேதி பன்வெல் பகுதியில் அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் உடல் கிடைத்தது. இது குறித்த தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த பெண்ணும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. வெவ்வேறு இடத்தில் கிடைத்த 2 உடல்களும் ஒரே மாதிரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால் போலீசார் அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்-மனைவியாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். 

இதனை தொடர்ந்து கொலை குறித்து விசாரணை நடத்திய போது மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த கோரா கான் (வயது 50) என்பவரது மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் கோரா கானை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவர், 'எனது மகள் குல்னாசை உத்திரபிரதேசம் பகுதியைச் சேர்ந்த கரன் ரமேஷ் சந்திரா (வயது 22) என்ற வாலிபர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

வேறு மதத்தைச் சேர்ந்த வாலிபரை தனது மகள் திருமணம் செய்து கொண்டது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரும் உத்திரபிரதேசத்தில் வசித்து வந்தனர். 

சமீபத்தில் நான் எனது மகளை தொடர்பு கொண்டு பேசி மகளையும் மருமகனையும் மும்பைக்கு வரவழைத்தேன். பின்னர் இருவரையும் எனது மகன் மற்றும் அவரது நண்பர் முகமது கான் உடன் சேர்ந்து கழுத்து அறுத்துக் கொலை செய்து அதனை மறைப்பதற்காக 2 பேரின் உடல்களையும் வெவ்வேறு இடத்தில் வீசி சென்றோம்' என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். 

இதனை அடுத்து போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவிய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

மேலும் போலீசார் கொலையாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் இளம் தம்பதியினரை ஆணவக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai honour killing couple murdered


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->