நடுவானில் சக பயணிகளிடையே தகராறு - இந்திய பயணி செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


நடுவானில் சக பயணிகளிடையே தகராறு - இந்திய பயணி செய்த கொடூரச் செயல்.!

கடந்த ஞாயிற்று கிழமையன்று எகிப்து நாடு கெய்ரோவிலிருந்து அந்நாட்டின் சர்வதேச விமானம் ஒன்று டெல்லி நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அதன் படி இந்த விமானம் நள்ளிரவில் பறக்கும் போது, ஆண் பயணி ஒருவர் சக பயணிகளிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரை அடுத்து, விமான ஊழியர்கள் அந்த பயணியை தட்டிக்கேட்டனர். ஆனால் அதன் பிறகும் அடங்காத அந்த பயணி விமானத்தின் இருக்கைகளை அடித்து, உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக எகிப்து விமானத்தின் விமானி, டெல்லி கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விமானம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்தது. 

அங்கு தயார் நிலையில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ரகளையில் ஈடுபட்டு வந்த இந்திய பயணியை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை, டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து, போலீசார் அந்த பயணியை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack co passanger in flight at mid air


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->