திடீரென உடைந்து விழுந்த மிதக்கும் பாலம்: கடலில் தத்தளித்த 15 பேர்.!
Kerala floating bridge broke down
கேரள மாநிலம், வர்கலாவில் கடலில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்து 15 பேர் கடகுக்குள் விழுந்தனர்.
தவறி விழுந்தவர்கள் உயிர்காக்கும் உடை அணிந்திருந்ததால் கடலில் மூழ்காமல் மிதந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் விழுந்த 15 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அதில் இரண்டு பேருக்கு உப்பு நீர் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Kerala floating bridge broke down