லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் எரிபொருள் தட்டுப்பாடு.!!
Fuel shortage due to lorry drivers strike
மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் இன்றுடன் 2வது நாளை எட்டியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு சென்று நிரப்பாததால், எரிபொருள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்தால், எரிபொருள் தட்டுப்படு அதிகரிக்கும் என்பதால், வடமாநிலங்களில் பொதுமக்கள் பலர் தனியாக கேன்கள் கொண்டுவந்து பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
English Summary
Fuel shortage due to lorry drivers strike