அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - நடந்தது என்ன?
flight emergency landing in delhi airport
லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் பயணித்த தம்பதியினர் நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால் விமானம் திடீரென டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.' என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதலில் விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி நிராகரிக்கப்பட்டதால் டெல்லியில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
flight emergency landing in delhi airport