அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. நள்ளிரவில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.!!
Earthquake in Rajasthan and America
ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நேற்று நள்ளிரவு 1:29 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாலி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 3.7 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் தூக்கத்திலிருந்து எழுந்த அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் இரவு 11 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.2 என பதிவான நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரைட்டர் அளவில் 4.8 என்ற அளவில் பதிவான நில நடுக்கத்தால் நியூயார்க் நகரில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட்செதமோ ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது
English Summary
Earthquake in Rajasthan and America