குஜராத் - நாய்கள் துரத்தியதால் கீழே விழுந்து பிரபல தொழிலதிபர் மரணம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் வாஹா பக்ரி என்ற டீ நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில், பரக் தேசாய் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த 15ம் தேதி மாலை நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த தெருநாய்கள் பரக் தேசாயை விரட்டியுள்ளன.

உடனே பரக் தேசாய் தெருநாய்களிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பரக் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பரக்கை மீட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், பரக் தேசாய்க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, பரக் தேசாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bussiness man died in gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->