காதலியை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.! ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்ததால் ஆத்திரம்.!
A lover who murder his girlfriend and burnt her body with petrol in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் காதலியை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் யாதகிரி பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் மாருதி ராதோடு. இவரும், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா பெண் என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பென்டெலா வெர்மா, டிக் டாக் போன்ற செயலிகள் மூலம் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இதையறிந்த மாருதி ராதோடு, நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பென்டெலா வெர்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாருதி ராதோடு, பென்டெலா வெர்மாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களிடையே வீடியோ எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த மாருதி, பென்டெலா வெர்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பென்டெலா வெர்மாவின் உடலை விளைநிலப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறியும் வந்த போலீசார், மாருதியிடன் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காதலியை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் இது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A lover who murder his girlfriend and burnt her body with petrol in Karnataka