நான்கு வயதில் கணவன் - மனைவியாக நாடகம்.! 22 ஆண்டுகளுக்கு பின்னர் முகநூலில் சேர்ந்த ஜோடி.!! உற்சாமாக நடைபெற்ற திருமணம்.!!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் உள்ள பாடசாலையில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே மாதத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். 

இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில்., இவர்களின் குழந்தைகளுக்கு ஸ்ரீராம் மற்றும் ஆர்ய ஸ்ரீ என்ற பெயரிட்டுள்ளனர். இந்நிலையில்., இவர்கள் இருவரும் நான்கு வயதில் இராணுவ வீரரின் இல்லத்திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். 

அந்த நேரத்தில்., இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளார். காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த இவர்கள் இருவரில் ஸ்ரீராம் இராணுவ அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார். 

ஆர்ய ஸ்ரீ மருத்துவ கல்லூரியில் நான்காம் வருடம் பயின்று வரும் நிலையில்., இவர்களின் சிறு வயது புகைப்படத்தை முகநூலில் கண்டு அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்துள்ளார். 

இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண்ணிடம் நாம் என் திருமணம் செய்யக்கூடாது என்று வினவியுள்ளார். இதனை கேட்ட பெண் தனது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே., இருவரின் பெற்றோரும் இவர்களின் ஆசைக்கு அனுமதி வழங்கியுள்ளார். 

இவர்கள் இருவரும் திருமணம் செய்யும் தகவலை தங்களின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கவே., இவர்களை வாழ்த்தி பலர் தங்களது வாழ்த்து மடல்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a kerala love couple marriage after 22 years rescue search Facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->