ஆந்திர பிரதேசத்தில் சோகம்.! மின்சாரம் தாக்கி விவசாயத் தொழிலாளர்கள் 6 பேர் பலி.!
6 farm workers died in electrocution in andhrapradesh
ஆந்திர பிரதேசத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 6 விவசாய தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் பொம்மசஹால் பகுதியில் சிலர் விவசாய நிலத்தில் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துப்பண்ணா என்ற விவசாயி ஆமணக்கு பயிர்களை வெட்டி தனது டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்த நிலையில், உயர்அழுத்த மின்கம்பி வயலில் வேலை செய்தவர்கள் மீது திடீரென அறுந்து விழுந்துள்ளது.
இதில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 6 விவசாய தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மின்சார துறையினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
6 farm workers died in electrocution in andhrapradesh