சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமளி- 5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்!
5 MLAs suspended for taking action against BJP MLA who watched obscene film in the assembly
சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், யாராவது புகார் கொடுத்தால் தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார். இந்நிலையில், திரிபுரா சட்டசபையில் இன்று படஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
English Summary
5 MLAs suspended for taking action against BJP MLA who watched obscene film in the assembly