இந்தியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 வெளிநாட்டு பெண்கள் கைது.! - Seithipunal
Seithipunal


கிழக்கு டெல்லியில் பாண்டவா நகரில் சர்வதேச அளவிலான விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சஷி கார்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஹோட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதற்காக போலி வாடிக்கையாளர் ஒருவரை ஹோட்டலுக்கு உளவு பார்க்க அனுப்பியுள்ளனர். அதனைத்தொடர்ந்து போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 இளம்பெண்கள் சிக்கினார்.

மேலும், பிரவீன் குமார் மற்றும் கேத்தன் கன்சால் ஆகிய 2 புரோக்கர்களையும் போலீசார் பிடித்தனர். ஓட்டலின் இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் அவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 foreign prostitute womens arrested in Delhi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->