22 மாடிக் கட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: போலீசார் தீவிர விசாரணை!
22 storey building fire accident Police investigation
மகாராஷ்டிரா, மும்பை மாலட் பகுதியில் உள்ள 22 மாடி கட்டிடத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, மலாட்டின் குரார் கிராம பகுதியில் அமைந்துள்ள குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் 22 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை காட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவை வருகிறது.
English Summary
22 storey building fire accident Police investigation