இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா..? சீலியரி தசைகள் எல்லாம் சுருங்கி இரத்த ஓட்டம் பாதிப்படையும், நாளடைவில் கண் ஈரப்பதம் இன்றி வறண்டு போகும்..?
கண்கள் துடிப்பது பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன. ஆனால் உண்மையில் கண்கள் துடிப்பதற்கான காரணம்..?
கண்கள் துடிப்பதற்கான காரணங்கள் தெளிவாக சுட்டிகாட்டபட்டுள்ளன,இதை படித்து தெரிந்து கொண்டு உங்களிடம் இருக்கும் மூடநம்பிக்கையை கைவிடுங்கள்.
நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே ஸ்ட்ரெஸ் குறைக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டும்
தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும்.
கண்களுக்கு போதிய ரெஷ்ட்டை தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும்.
காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அப்போது கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.
மேலும்காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.
ஒரு மணி நேரத்தில் குறைந்தது, 20 முறையாவது இமைக்க பழகுங்கள், இதனால், கண்களின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.
கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தை விடவும் சுற்றுப்புற வெளிச்சம் அதிகமாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்
எவ்வளவுதான் வேலையில் பிசியாக இருந்தாலும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் பிரேக் எடுப்பது, கண் தசைகள் ரிலாக்சாக இருக்க உதவும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை, மூடிய இமைகளின் மேல் மெதுவாக அழுத்தும்படி உள்ளங்கைகளை, 20 எண்ணும் வரை வைத்திருங்கள். இப்படி செய்வதால் கண்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்.
English Summary
reason for frequently blinking of eyes