வழுக்கை தலையில் கூட முடி வளரும்.. இந்த ஒரு எண்ணெய் போதும்.!  - Seithipunal
Seithipunal


தலைமுடி உதிர்வை குறைத்து முடியை மென்மையாகவும், பள பளப்பாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் வைக்கக்கூடிய எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் : 

அரை கப் செம்பருத்தி இலைகள் 

இரண்டு செம்பருத்தி பூக்கள் 

கால் கப் தேங்காய் எண்ணெய் 

கால் கப் பாதாம் எண்ணெய் 

செய்முறை : 

செம்பருத்தி இலை மற்றும் பூவை குளிர்ந்த நீரில் கழுவி தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர வைக்க வேண்டும்.

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை மற்றும் பாதாம் எண்ணெயை சேர்த்து காய வைத்துள்ள செம்பருத்தி இதழ்கள் மற்றும் இலைகளை சேர்த்து சூடாக்க வேண்டும். 

குறைந்த தீயில் வைத்தவாறு சூடானவுடன் இறக்கி அதை குளிர வைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இந்த எண்ணையை நமது வேர் கால்களில் படுமாறு பயன்படுத்தி வர வேண்டும். 

இதில் அதிகப்படியான பலனை பெற ஒவ்வொரு முறை எண்ணையை தலையில் தடவும் பொழுதும் லேசாக சூடு படுத்திக் கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hibiscus hair oil preparation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->