குழந்தை பிறந்ததும் நிச்சயம் இதைதான் செய்வேன்! திருமணத்திற்கு முன்பே அம்மாவான எமியின் ஓபன் டாக் !!
emy jackson talk about her baby
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன், அதைதொடர்ந்து அவர் தாண்டவம், தெய்வமகன், ஐ, தெறி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும் இவர் ரஜினியுடன் ரோபோவாக நடித்த 2.O படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
லண்டனை பூர்விமாக கொண்ட இவர் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் தனது காதலனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சை கிளப்பி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இது குறித்து பேசிய எமி ஜாக்சன் கூறுகையில், "நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது. 6 வாரங்கள் கழித்து தான் தெரிந்தது. நான் இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன்.
மேலும் நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம். ஆணோ பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் பிறந்ததும் அவர்களுடன் உலகம் சுற்ற வேண்டியதுதான். என் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர் என எமி தெரிவித்துள்ளார்.
English Summary
emy jackson talk about her baby