குரங்கு அம்மை பரவல் குறித்து கண்காணிப்பு தேவை.! உலக சுகாதார மையம்.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை பரவல் குறித்து மிகுந்த கண்காணிப்பு தேவை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இதுவரை 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கியதில் 3,417க்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் குரங்கு அம்மை நோய் பல நாடுகளில் பரவி வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பாதித்தவா்களை கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைகள், தடுப்பூசி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குரங்கு அம்மை வளரும் நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளதால் மிகுந்த கண்காணிப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO says Monkeypox requires close monitoring


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->