டெல்லி கலவரம் தொடர்பாக காட்டமான கருத்துக்களை பதிவு செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்.!!
UNO Human rights commission speech about delhi violence
ஐக்கிய நாடுகளின் சபை மனித உரிமை அமைப்புடைய 43 ஆவது ஆலோசனை கூட்டமானது சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய நடுகல் சபை மனித உரிமை அமைப்பு அதிகாரி மிச்சேல் பேசலட் டெல்லி கலவரம் தொடர்பாக பேசியிருந்தார்.
இவர் பேசிய சமயத்தில், டெல்லி கலவரம் தொடர்பாக கவலை தெரிவித்துவிட்டு, இந்திய நாட்டில் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் டெல்லி கலவரத்தின் போது காவல் துறை செயல்படாமல் இருத்தல் போன்றவை பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
மக்கள் அனைவரும் அமைதியான முறையில் குடியுரிமை சட்டத்தினை எதிர்த்து போராடி வந்து கொண்டு இறுகின்ட்நரர். இவர்கள் நீண்டகாலமாக மதசார்பற்ற பாரம்பரியத்தை ஆதரவு செய்து வருகின்றனர்.
டெல்லி நகரில் நடைபெற்ற கலவரத்தின் போது காவல் துறையினர் பாராமுகமாக இருந்து வந்தனர். பின்னர் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது. காஷ்மீர் மாநிலத்திலும் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அங்குள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் 800 பேர் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இராணுவம் குவிக்கப்பட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இணைய சேவைகள் முடங்கியுள்ளது என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
UNO Human rights commission speech about delhi violence