மடகாஸ்கரில் சோகம் - நடுக் கடலில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மடகாஸ்கர் நாட்டில் இருந்து 47 பேருடன் படகு ஒன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள மயோட் தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் சில நேரத்தில் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. 

இந்த நிலையில், இந்த படகு எதிர்பாராதவிதமாக திடீரென கடலில் கவிழ்ந்தது. இது குறித்து அங்கிருந்தவர்களில் சிலர் மீட்பு பி[அடையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

அங்கு முதலில் அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் கடலுக்குள் மூழிகியவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த விபத்தில் மொத்தம் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மீட்புப்படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதுகுறித்து மீட்படையினர் தெரிவித்துள்ளதாவது:- "இந்த விபத்தில் மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty peoples death for boat capsized in madagascar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->