அசாமில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


அசாமில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது.!!

அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் ஐம்பது சோப்பு பெட்டிகள் இருந்தது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தனர். 

அந்த பெட்டியில் ரூ.11 கோடி மதிப்புள்ள 700 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்து வாகனத்தில் இருந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். 

அந்த விசாரணையில், அவர்கள் போதைப்பொருளை குவஹாத்தியில் இருந்து துப்ரி பகுதிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for drugs kidnape in assam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->