தலா 100 கோடி டாலர் கடன் வழங்குமாறு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வங்கதேச அரசு கோரிக்கை
The Bangladesh government asks 200 cr loan from WB and ADB
பன்னாட்டு சந்தைகளின் சரிவால் உணவுப்பொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்ந்து பண வீக்கம் ஏற்பட்டு உள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு போதுமான அளவில் அந்நியச்செலாவணி இல்லாததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், வங்கதேசத்தின் இறக்குமதி செலவும் அதிகரித்து நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க அந்நியச்செலாவணி இருப்பை அதிகரிக்க வேண்டும் என்பதால் உலக வங்கியிடமும், ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் தலா 100 கோடி டாலர் கடன் வழங்குமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
English Summary
The Bangladesh government asks 200 cr loan from WB and ADB