பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்! இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என ராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அவற்றின் விலையும் அதிக அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தலைநகர் கொழும்புவில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை சம்பவம் அரங்கேறியது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து பிரதமரின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தொடர் வன்முறை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிரதமரின் இல்லத்திற்கு தீவைத்தனர். இவ்வாறு ஆளும் கட்சியினரும், பொதுமக்களும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறங்கியுள்ளது .

நாட்டையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளதால் இராணுவத்தின் முயற்சிக்கு இலங்கை மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவத்தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Economic crisis


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->