இலங்கை: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் விவகாரம்.. சிறுமியின் தந்தை உட்பட 41 பேர் கைது.!
SriLanka Colombo 15 Aged Child Sexual Abuse and Forced Prostitution Case 41 Arrested with girl Father
லவுனியாவில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 41 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி திருப்பமாக சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள கொழும்பில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இதய நிபுணராக 41 வயது மருத்துவர் பணியாற்றி வந்தார். இவரது 33 வயது நண்பர் அங்குள்ள பந்தரகாமா பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை நடந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் தொழிலாளி போல பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவலும் உறுதியானது.
சிறுமியை சீரழிக்க உதவி செய்தவர்கள், சிறுமியை வைத்து விபச்சாரம் செய்தவர்கள், அவர்களுக்கு வாகன உதவி செய்தவர்கள், விடுதிகளில் அறைகள் கொடுத்தவர்கள், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் என 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாலத்தீவின் முன்னாள் மாநில நிதியமைச்சர் மொஹமட் அஷ்மாலி மற்றும் மிஹிண்டலே பிரதேசத்தின் துணைத்தலைவர், முன்னணி வைர வியாபாரியும் காவல் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விவகாரம் இலங்கையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தொடர் விசாரணையில் உள்ளூர் நபர்களில் இருந்து பல முக்கியஸ்தர்களும் கைது செய்யப்பட்டதால் பெரும் அதிர்வலை எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் தீவிரமெடுத்து, பலரும் காவல் துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியது, அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது வரை காவல் துறையினரால் மொத்தமாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி திருப்பமாக சிறுமியின் தந்தை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது தாயாரும் சந்தேக விசாரணை வளையத்தில் இருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடம் சிறுமியின் தந்தையே தனது மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
SriLanka Colombo 15 Aged Child Sexual Abuse and Forced Prostitution Case 41 Arrested with girl Father