தென்னாப்பிரிக்கா : நைட் கிளப்பில் சிறுவர்கள் மர்ம மரணம்.. பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள ஒரு தற்காலிக இரவு விடுதியில் மர்மமான முறையில் 17 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள சினரி பூங்காவில் உள்ள உள்ளூர் உணவகத்தில் 17 பேர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அங்குள்ள வளாகத்தில் சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்பொழுது மேலும் 4 இளைஞர்கள் இறந்ததால் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களில் எந்தவித வெளிக்காயங்களோ இல்லை என்றும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 13 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் இவர்களின் இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Africa Night club party 21 death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->