மெக்சிகோவில் பேருந்து மீது ரெயில் மோதல் - 7 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் பேருந்து மீது ரெயில் மோதல் - 7 பேர் உயிரிழப்பு.!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குரேடாரே மாகாணத்தில் உள்ள எல்.மார்க்யூஸ் நகரில் பயணிகள் பஸ் ஒன்று தண்டவாளத்தைக் கடந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த ரெயில் பேருந்து மீது மோதியது. 

இந்த விபத்தில் பேருந்து, ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டதால் 7 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மெக்சிகோ நாட்டில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died for accident in mexico


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->