ஒன்றாக இல்லையென்றால் இழந்துவிடுவோம்.! பரபரப்புக்கு மத்தியில் வேதனையோடு பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 21–ந் தேதி  ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. அப்பொழுது அங்கு திடீர் குண்டுவெடிப்பு  நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

அதில் இதுவரை 300 க்கும் அதிகமான பேர் பலியானர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகையே அதிர வைத்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும்  இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழலே நீடித்து வருகிறது. சமீபத்தில் இலங்கையில் இஸ்லாமியர்களின் நிர்வாகநிலையங்கள் மற்றும் மசூதிகள் மீது  கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால்  சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிறுத்துங்கள் நன்கு மூச்சுவிட்டு கண்களை திறந்து யோசியுங்கள். வன்முறை, இனவெறி, வேற்றுமைக்கு நாம் நம்மை இழந்தால்,  நம் நாட்டையே இழந்து விடுவோம்.

இலங்கையர்களாக ஒன்று கூடுங்கள்,அனைவரும் சமாதானமாக இருங்கள், மற்றவர்களையும் பாதுகாப்புடன் வையுங்கள். பிரிவினையை தூண்டும் அரசியல்வாதிகளில் சூழ்ச்சியில் சிக்கிவிடாதீர்கள். நாம் ஒரு நாடாக மீண்டும் மீண்டு எழுந்து வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sankakara tweet about srilanka bombblast


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->