உணவு நெருக்கடியை சமாளிக்க ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும்.! ரஷ்ய அதிபர் புடின்.! - Seithipunal
Seithipunal


உணவு நெருக்கடியை சமாளிக்க ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனின் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதால், உக்ரைனில் உற்பத்தியாகும்  தானியங்களின் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக நாடுகளின் பொருளாதாரத் தடையால் ரஷ்யாவில் உற்பத்தியாகும் தானிய ஏற்றுமதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், சர்வதேச உணவு சந்தைகளில்  நெருக்கடி ஏற்பட்டு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உணவு நெருக்கடியை சமாளிக்க ரஷ்யா மீதான ஏற்றுமதி மற்றும் பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் உதவுவோம்.

ஆனால் ரஷ்ய தானிய ஏற்றுமதிக்காக விமான விநியோகம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் மேற்கத்திய நாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும், உலகில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி, சிறிதளவு கூட சாத்தியமற்றது என்றும், செய்தியாளர்களிடம் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanctions on Russia to be removed to tackle food crisis


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->