நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை பிரான்ஸ் மறந்து விடக்கூடாது - ரஷ்யா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் நடைபெற்ற முனீச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பாரிஸ் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போரில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விருப்பப்படுவதாகவும், ஆனால் ரஷ்யா போரில் நசுக்கப்படுவதை தான் பார்க்க விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும் போரில் உக்ரைன் பின் வாங்காமல் தனது உறுதியான நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செய்தி தொடர்பாளர் மரியா ஜக்கோராவா, நெப்போலியன் பார்ட்டின் தலைவிதியை மாஸ்கோ இன்னும் நினைவில் வைத்திருப்பதாகவும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் நெப்போலியன் எனக்கு ஏற்பட்ட கதியை மறந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia warns France not to forget the fate of Napoleon


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->