2-ம் உலகப் போருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்... உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா..! - Seithipunal
Seithipunal


இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிராக சோவியத் யூனியன் வெற்றி பெற்று 78 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரஷ்யா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட வருடாந்திர நிகழ்ச்சியில் போரில் உயிரிழந்த ரஷ்யா ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் அதிபர் புதின் முன்னிலையில் சுமார் 8000 வீரர்களின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நினைவு கூறும் வகையில் உக்ரைன் முழுவதும் ரஷ்யா 25 ஏவுகணைகளை ஒரே இரவில் ஏவியுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல், போரின் வெற்றியை கொண்டாடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரவோடு இரவாக ரஷ்யா 25 ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் 23 வான் பாதுகாப்புகளால் வெற்றிகரமாக இடைமறித்து அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia rained missile on Ukraine to celebrate the victory of World War II


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->