உக்ரைனில் குண்டு வீசி ரஷ்யா தாக்குதல்.! 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்.! - Seithipunal
Seithipunal


ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரையனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் உக்ரைன் கோஸ்டியான்டினிவ்கா நகரத்தில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில் அந்நகரத்தில் உள்ள 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், வணிக கட்டிடங்கள் என உக்ரைனின் உள் கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Bomb attack in Ukraine 30 residential buildings damaged


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->