வரலாறு காணாத வெப்பத்தால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய இங்கிலாந்து.!
Red alert for england due to extreme heat
கடந்த சில நாட்களாகவே இங்கிலாந்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் நாட்டில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் உச்சபட்ச வெப்பநிலை நிலவும் என்பதால் பிரிட்டன் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இரவு நேரங்களில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால் அதிகபட்சமாக நகர்புறங்களில் வெப்பம் உச்சத்தை தொடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ரெட் அலர்ட் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமான வெப்பநிலை நிலவும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்ன அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Red alert for england due to extreme heat