இஸ்ரேல் வீரர் மீது தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை.!  - Seithipunal
Seithipunal


பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு தொடர் கதையாகி வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி  நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலினால் இரு தரப்பிலும் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் நப்லஸ் நகரில் ஹவ்ரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு மூன்று பாலஸ்தீனர்கள் வந்தனர். இதை பார்த்த இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்களில் ஒருவர் திடீரென பாதுகாப்பு படை வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பறிக்கவும், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரையும் தாக்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள்  தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை கைத்துப்பாக்கியை கொண்டு சுட்டார். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த வீரரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palestinian people shoot died for isrel soldiers attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->