பாகிஸ்தான் பெண்களுக்கு சீனர்களால் ஏற்படும் கொடுமை.! வெளியான அதிர்ச்சி.!
PAKISTHAN GIRLS FORCED TO PROSTITUTION BY CHINA PEOPLES
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்களை கடத்தி சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவ பெண்களை சீனாவை சேர்ந்த பலர் கடந்த ஆண்டுகளில் அதிகளவில் திருமணம் செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல 2018-19ல் 629 பெண்கள் சீனர்களை திருமணம் செய்து கொண்டு சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனால், திருமணம் செய்யப்பட்ட அந்த பெண்கள் சீனர்களின் வயதில் பாதி அளவுகூட வராத மிகச்சிறிய பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பல பாகிஸ்தான் குடும்பங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களுடைய பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், ஆனால் அங்கே திருமணம் செய்து செல்லும் பெண்கள் அடிமைகளாகவும், பாலியல் தொழிலுக்கும் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும், பணம் வாங்கி கொண்டு பெண்ணை கொடுப்பது அந்த பெண்ணை விற்பது போன்றது தான். எனவே, இதனை கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான விஷயமாக தான் கருத வேண்டும். பணத்திற்காக சீனாவுக்கு கடத்தப்பட்ட பெண்களை மீட்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
PAKISTHAN GIRLS FORCED TO PROSTITUTION BY CHINA PEOPLES