கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி காண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. மேலும் கடந்த 2022ஆம் ஆண்டில் வடகொரியா 65க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. சுமார் 67 நிமிடங்கள் பறந்த இந்த ஏவுகணை, 900 கி.மீவரை சென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்கா-தென் கொரியா ராணுவ கூட்டுப் பயிற்சியை எதிர்த்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரியா எல்லைப் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதாக ஜப்பானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மாட்சன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Korea conducted intercontinental ballistic missile test again


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->