மெக்சிகோவில் பயங்கரம் - உணவு வினியோக நிறுவனம் மீது வெடிக்குண்டு வீச்சு - 9 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் பயங்கரம் - உணவு வினியோக நிறுவனம் மீது வெடிக்குண்டு வீச்சு - 9 பேர் பலி.!

வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்த நாட்டில் உள்ள மத்திய மெக்சிகோ மாகாணம் டொலுகா நகரில் மொத்த உணவு வினியோக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் நிறுவனத்தின் மீது வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்தது தப்பித்துச் சென்றனர். இதனால், அந்த நிறுவனம் தீப்பிடித்து தகதகவென எரிந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒன்பது பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

மேலும், ஒருவர் மட்டும் படுகாயமடைந்தார். உடனே போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் முன்விரோதம் காரணமாக வெடிகுண்டை உணவு விநியோக நிறுவனத்தின் மீது வீசியிருப்பது தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine peoples died for bomb attack on Food distribution company in mexico


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->