பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா! இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!
New bill passed in Srilanka
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் ஒரு நடவடிக்கையாக பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக விலயேற்றம் தொடரபாக இலங்கையில் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வீதியில் இறங்கியும் நாடாளுமன்றத்தின் முன்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் விதமாக பண்க்காரரகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
English Summary
New bill passed in Srilanka