லண்டன் : ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு கத்திக்குத்து.! காரணம் என்ன?.
near londan three members attack knife
இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் அருகே இன்று திடீரென மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லண்டன் நகர போலீசார் நிகழ்விடத்திற்கு உடனடியாக சென்று, அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, கத்திக்குத்துபட்டவர்களை போலீசார் அருகேயுள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, "இது பயங்கரவாத தாக்குதல் அல்ல" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தாக்குதல் கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் நடந்திருக்க கூடும் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
English Summary
near londan three members attack knife