மெக்சிகோ || மதுபான கடையில் துப்பாக்கிசூடு.! 9 பேர் உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாடோ மாகாணத்தில் அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் மதுபான விடுதி ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த ஐந்து ஆண்களும், நான்கு பெண்களும் கொலைசெய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பெண்கள் காயமடைந்தனர். உடனே அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது. 

இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படாததால், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதிக்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மெக்சிகோ நாட்டின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக மர்ம கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

megsiko gun shoot in liquor store nine peoples died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->