சிலுவையில் அறையப்போவதாக மிரட்டல் வருகிறது.. போலீசில் பாதுகாப்பு கேட்கும் வாழும் ஜீஸஸ்.! - Seithipunal
Seithipunal


கென்யாவில் தன்னைத்தானே வாழும் இயேசு கிறிஸ்து என்று கூறிக் கொள்ளும் பாதிரியார் தன்னை காப்பாற்றுங்கள் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

கென்யா நாட்டின்  புங்கோமா மாகாணத்தில் உள்ள டோங்கரேன் பகுதியை சேர்ந்தவர் எலியுட் சிமியூ. இவர் தன்னைத்தானே வாழும் இயேசு கிறிஸ்து எனக் கூறிக்கொண்டு தனக்கு கீழ் சீடர்களை வைத்துக்கொண்டு மதப் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி தனது பெயருக்கு பதிலாக இவர் டோங்கரன் இயேசு என பெயரை மாற்றி வைத்துள்ளார்.

இந்த நிலையில் வாழும் இயேசு என்று சொல்லிக் கொள்ளும் இவரை அப்பகுதி மக்கள் ஈஸ்டர் தினத்தில் சிலுவையில் அறையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதன்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவார் அதேபோல் இவரையும் சிலுவையில் அறைய வேண்டும். உயிர்த்தெழுகிறாரா என்று பார்க்கலாம் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இதனை அறிந்த அந்த பாதிரியார் என்னை காப்பாற்றுங்கள் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

வாழும் இயேசுவான சிமியுக்கு 20 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது இதில் இவருக்கு தற்போது 8 குழந்தைகள் உள்ளனர். இதில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த குடும்ப சண்டையில் சிமியுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பியதில் இருந்து இது போன்று மதப் பிரச்சாரங்களை தொடங்கினார் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சிமியுவின் மனைவி தனது கணவர் குறித்து கூறுகையில், தனது கணவர் தண்ணீரை தேநீராக மாற்றினார் என்றும் அதனை கிராம மக்கள் குடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தான் வாழும் இயேசு கிறிஸ்து என்று கூறியதால் கிராம மக்கள் தனது குடும்பத்தை ஒதுக்கி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kenya pastor protect security to police


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->