பழைய டேபிளை தூசிதட்டி விசாரணை.. இவன்கா ட்ரம்ப் சிக்கல்.!
Ivanka Trump Investigation 4 December 2020
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி ரூ.790 கோடியில், குறிப்பிட்ட தொகை தவறான வழியில் பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த பணம் அதிபர் ட்ரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அப்பணத்தில் இருந்து ட்ரம்பின் குடும்பத்தினர் ஆதாயம் தேடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்க்டன் நகரில் உள்ள ட்ரம்பின் உணவகம் அரசு தொடர்பான கூட்டத்திற்கு அதிகளவு கட்டணம் வசூல் செய்தது என்றும், பெரும்பாலான கூட்டங்கள் அங்கு வைத்து தான் நடத்தப்பட வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவன்கா நிர்வகித்த விஷயங்களில் அடுத்தடுத்த குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், இது அரசியல் விமர்சனம் கொண்டது எனவும் இவன்கா ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக தற்போது வரை வெள்ளை மாளிகை தரப்பில் எந்த விதமான பதிலும் வெளிவராத நிலையில், ட்ரம்பின் நிர்வாகிகள் குழு குற்றசாட்டுகளை மறுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரூ.22.14 கோடி அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே அதிபர் பிரச்சனையில் வாக்கு எண்ணிக்கைகள் சரியாக நடைபெறவில்லை, நான் தான் அடுத்த அதிபர் என்று ட்ரம்ப் பேசி வரும் நிலையில், இவன்காவின் முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ivanka Trump Investigation 4 December 2020