இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் 50 பணய கைதிகள் பலி!!
Israel army killed 50 hostages
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் இன்றுடன் 21வது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிர படுத்தியுள்ளது. நேற்று இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் ராணுவ அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதி தளபதி ஹசன் அல் அப்துல்லாவை கொன்றது.
மேலும் இஸ்ரேல் ராணுவம் நேற்று கிப்பட்ஸ் பகுதியில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரை போட்டு தள்ளிவிட்டு பணைய கைதிகளை மீட்டுச் சென்றது இஸ்ரேல் ராணுவம். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர்கள் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் காசாவில் பணயக் கைதிகளாக இருந்த சுமார் 50 பேரை இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பின் ஆயுத பிரிவான அபு ஒபைடாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
Israel army killed 50 hostages