சிங்கப்பூரில் இந்திய யோகா பயிற்சியாளர் மீது 5 பெண்கள் பாலியல் புகார்.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர் நாட்டில் உள்ள இந்திய யோகா பயிற்சியாளர் மீது 5 இளம் பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டில் உள்ள திலக் ஆயர் பகுதியில் டிரஸ்ட் யோகா பயிற்சி மையத்தை இந்தியாவை சேர்ந்த ராஜ் பால் சிங் வயது 33 என்பவர் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் சேர்ந்த இவர் மீது நான்கு இளம் பெண்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.

அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜ்பால் சிங் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 25 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து யோகா பயிற்சி உரிமையாளரிடமும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த மேலும் 3 பெண்களும் அந்த நபர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பெண்களை தனித்தனியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து யோகா பயிற்சியாளர் ராஜ்பால் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian yoga sexual Harrasment to 5 girls in Singapore


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->