காருக்குள் உட்கார்ந்து கெத்தாக தம்மை பற்றவைத்து நபர்..! வெடித்து சிதறி அரங்கேறிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் இருக்கும் மேற்கு யார்கூயரின் பகுதியில் காரொன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த காரில் அமர்ந்திருந்த நபர் காரை வாசனை மயமாக்கம் ஏர் பிரஷரை காரில் நிரப்பியுள்ளார். 

இந்த சமயத்தில்., காரில் வழக்கத்தை விட அதிகளவு நறுமணத்தை ஏற்றியுள்ள நிலையில்., காரில் அமர்ந்து புகைபிடிக்கும் எண்ணம் தோன்றியுள்ளது. இதனையடுத்து புகையிலையை வாயில் வைத்து புகைபிடிக்க நெருப்பை லைட்டர் மூலமாக பற்றவைத்துள்ளார். 

புகையை எரியவைக்க பற்றிய தீயானது காருக்குள் தீப்பற்றி வெடி சத்தமானது கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சென்ற மக்கள் பெரும் பீதிக்குள்ளான நிலையில்., இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும்., பலத்த சப்தத்துடன் கார் வெடித்ததால் குண்டு வெடிப்பு சம்பவம் என்று எண்ணிய மக்கள் பெரும் பீதிக்கு உள்ளான நிலையில்., காரின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி., காருக்கு அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. 

எதிர்பாராது நடந்த விபத்தில் பெரியளவில் காயங்கள் ஏதுமில்லாது விபத்தில் சிக்கிய நபர் தப்பிக்கவே., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England car explodes room spray with cigarette


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->