கணவரை ரூ.1400 க்கு கள்ளகாதலிக்கு விற்பனை செய்த மனைவி... பணத்தை வைத்து செய்த காரியம்.!! - Seithipunal
Seithipunal


கிழக்காபிரிக்க நாட்டில் உள்ள கென்யாவை சார்ந்த பெண்மணியின் பெயர் எட்டணா முக்வானா. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில்., இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியே சென்றுள்ளார். 

இவரது கணவர் வீட்டில் இருந்த நிலையில்., வெளியே சென்ற மனைவியின் பணியானது நிறைவடைந்ததால் விரைவாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. 

வீட்டிற்கு உள்ளே கணவர் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்டு கடுமையான ஆத்திரமடைந்த முக்வானா இருவரையும் வீட்டினை விட்டு வெளியே துரத்தியுள்ளார். 

இந்த சமயத்தில்., வீட்டினை விட்டு வெளியே வந்த இருவரும் சண்டையிட்ட நிலையில்., முக்வானாவின் கள்ளக்காதலி அவருடைய மனைவியிடம் தங்களின் கணவருக்கு 2 ஆயிரம் கேன்யன் ஷில்லிங்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1400) தருவதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு சற்று யோசனை செய்த முக்வானா., தனது கணவருக்கோ தன்னுடன் வாழ விருப்பமில்லை. வரும் பணத்தை வைத்தாவது தனக்கு பிடித்த வாழ்க்கையை ஏற்படுத்த எண்ணி சம்மதம் தெரிவிக்கவே., ரூ.1400 க்கு கணவரை விற்பனை செய்துள்ளார். 

இத பணத்தினை வைத்து தனது குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து அழகு பார்த்த நிலையில்., இந்த செய்தி கிராமிய பாட்டிகளின் காதலின் விழுந்து கிராமம் வரை பரவி., தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in africa husband sales to illegal affair girl by wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->