இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேற சொல்லும் மரியம் நவாஸ்.!
Imran Khan Maryam Nawaz Pakistan
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி தற்போது கவிழ்ந்து உள்ளது.
இதற்கிடையே, நேற்று பாகிஸ்தான் மக்கள் மத்தியில் உரையாற்றிய இம்ரான்கான், இந்தியா ஒரு சுயமரியாதை உள்ள நாடு. நான் இந்தியாவுக்கு எதிரானவன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், அந்நாட்டுக்கு நாட்டின் நலனுக்கு எதிராக எந்த ஒரு வல்லரசு நாடு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.
இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரும், முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
அகில், "இம்ரான் கானுக்கு இந்தியாவை மிகவும் பிடித்து இருந்தால், பாகிஸ்தானில் இருக்கவேண்டாம். அவர் வேறு நாட்டுக்கு சென்று விடலாம். இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக இருக்க முடியாது. அவர் அதிகாரத்தை இழந்து விட்டதால், அவருக்கு தற்போது பைத்தியம் பிடித்துவிட்டது. சுயநினைவு இல்லாத ஒரு நபர் ஒட்டுமொத்த நாட்டை யும் விழுத்தி நாசம் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது" என்று மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Imran Khan Maryam Nawaz Pakistan