மாஸ்கோ.! அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.! 8 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சுமார் 200 பேர் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தங்கி இருந்த விடுதியில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தப்பி வெளியேறிய நிலையில், விடுதியில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். விடுதி ஜன்னல்களில் இரும்பு கம்பிகள் இருந்ததால்,  வெளியில் தப்பி செல்ல முடியாமல் தீயில் மாட்டிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் விடுதியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாஸ்கோ நகர சபையின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் கிரில் ஷிடோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire at Moscow hostel


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->