இது மட்டும் நடந்துவிட்டால், பாகிஸ்தான் திட்டமெல்லாம் குளோஸ்..! ஜெய்சங்கர் அதிரடி.!!
external affair minister speech about Pakistan 70 year plan destroy
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி., அமெரிக்காவிற்கு சென்று தற்போது திரும்பியுள்ள நிலையில்., வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்., இந்தியாவுடைய வெளியுறவு கொள்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் அவர் தெரிவித்தாவது.,
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில்., வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அனைத்தும் துவங்கும் சமயத்தில்., பாகிஸ்தான் நாட்டினுடைய 70 வருட திட்டங்கள் அனைத்தும் கானல் நீராக போய்விடும்.
காஷ்மீர் பகுதியில் தற்போது உள்ள நிலவரப்படி., இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி., பயங்கரவாதத்தை ஒன்று திரட்டும் முயற்சியானது நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக இணைய சேவைகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்க துவங்கும் சமயத்தில்., எவ்விதமான உயிரிழப்புகளும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து., தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
external affair minister speech about Pakistan 70 year plan destroy