பாரில் இருந்து வெளியேற்றப்பட்ட வாலிபர் - ஆத்திரத்தில் செய்த விபரீத செயல்.! - Seithipunal
Seithipunal


பாரில் இருந்து வெளியேற்றப்பட்ட வாலிபர் - ஆத்திரத்தில் செய்த விபரீத செயல்.!

வட அமெரிக்கா நாட்டிலுள்ள மெக்சிகோவில் பார் ஒன்றில் வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பாருக்கு தீ வைத்துள்ளார். 

இந்த தீ விபத்தில், ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என்று மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, சோனோராவில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்ததாவது, "பாரில் பெண்களை அவமரியாதையாக நடத்தியதற்காக வாலிபர் ஒருவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

அதன் பின்னர் அந்த நபர் திரும்பி வந்து மறைமுகமாக மொலோடோவ் காக்டெய்ல் போன்ற எரியும் பொருளை பாரில் வீசினார். இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பாரின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்" என்றுத் தெரிவித்தனர் .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elevan peoples died for fire accident in mexico


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->